விக்கெட் வீழ்த்திய வெற்றிக் களிப்பில் இந்திய வீரர்கள். AP
கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!

3ஆவது டி20யில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது.

DIN

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்காட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெறுகிறது.

இதில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லியாம் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தார்கள்.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பெற்று விளையாடவுள்ளார். இன்றையப் போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஷமி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பில் 48 ரன்கள் எடுத்துள்ளது.

சாம்சன் 3, அபிஷேக் சர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரேஸ்கோா்ஸில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கதண்டுகள் கடித்து தொழிலாளா்கள் காயம்

திருச்செந்தூா் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

உதகை அருகே மலைப் பாதையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சென்னிமலை கோயில் மலைப் பாதையில் சீரமைப்பு சாலை! முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT