FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசிய டாப் 3 வீரர்கள்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் அதிவேகமாக சதம் விளாசி அசத்தினார்.

30 ஜனவரி 2025, 5:50 pm IST
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஜோஷ் இங்லிஷ் - படம் |AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் அதிவேகமாக சதம் விளாசி அசத்தினார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நேற்று (ஜனவரி 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 654 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 232 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களும், அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஷ் 102 ரன்களும் எடுத்தனர்.

அதிவேக சதம் விளாசிய ஜோஷ் இங்லிஷ்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் 93 பந்துகளில் அதிரடியாக 102 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ஜோஷ் இங்லிஷ், அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர்கள்

ஷிகர் தவான் (இந்தியா) - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (85 பந்துகளில், 2013)

ஜோஷ் இங்லிஷ் (ஆஸ்திரேலியா) - இலங்கைக்கு எதிராக (90 பந்துகளில், 2025)

டுவைன் ஸ்மித் (மே.இ.தீவுகள்) - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (93 பந்துகளில், 2004)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments