முகப்பு
கிரிக்கெட்

டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் அசத்திய விமல் குமார் குறித்து...

Updated On : 5 ஜூலை 2025, 11:29 am IST
ஆட்டநாயகன் விருது வென்ற விமல் குமார். - படம்: எக்ஸ் / டிஎன்பிஎல்
பகிர்:

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் ஒரே ஓவரில் 34 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் நேற்றிரவு (ஜூலை 4) குவாலிஃபயர் 2 போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்க்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வென்றது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 8.4 ஓவரில் 63/3 என இருந்தது. பின்னர், விமல் குமார் வந்ததும் அணியில் ஸ்கோர் உயரத் தொடங்கியது.

16 ஓவர்கள் முடிவில் 127-4 என இருந்தது. 4 ஓவர்களுக்கு 52 ரன்கள் தேவையாக இருந்தது. 17-ஆவது ஓவரில் 4 6 6 6 6 6 என ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசி விமல் குமார் போட்டியையே மாற்றிவிட்டார்.

டிஎன்பில் வரலாற்றில் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் அணி 4-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

summary

Dindigul player Vimal Khumar scored 34 runs in a single over to lead the team to victory in the TNPL Qualifier 2 match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments