ஜோ ரூட் 
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் தொடர், தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆகிய தொடர்களும் நடைபெற்று வருகிறது.

வாரந்தோறும் புதன்கிழமை ஐசிசியின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, இந்தவார ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்கள் முறையே 104, 40 ரன்கள் விளாசிய ஜோ ரூட் 888 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், இரண்டு இடங்கள் சரிந்து 3-வது இடத்துக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட்டில் சொதப்பிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு இடமும், கேப்டன் ஷுப்மன் கில் 3 இடங்களும் சரிவைக் கண்டுள்ளனர். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் ஒரு இடம் சரிவைக் கண்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களின் தரவரிசை

1. ஜோ ரூட் - 888 புள்ளிகள்

2. கேன் வில்லியம்சன் - 867 புள்ளிகள்

3. ஹாரி புரூக் - 862 புள்ளிகள்

4. ஸ்டீவ் ஸ்மித் - 816 புள்ளிகள்

5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 801 புள்ளிகள்

6. டெம்பா பவுமா - 790 புள்ளிகள்

7. கமிந்து மெண்டிஸ் - 781 புள்ளிகள்

8. ரிஷப் பந்த் - 779 புள்ளிகள்

9. ஷுப்மன் கில் - 765 புள்ளிகள்

10. ஜேமி ஸ்மித் - 752 புள்ளிகள்

JOE ROOT - THE NEW NO.1 RANKED ICC TEST BATTER

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT