முகப்பு
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூலை 2025, 3:22 pm IST
மைக்கேல் பிரேஸ்வெல் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. முத்தரப்பு டி20 தொடர் நிறைவடைந்தவுடன் நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு

Advertisement

Advertisement

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸ் இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிளன் பிலிப்ஸுக்கு மாற்று வீரராக ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் பேசியதாவது: காயம் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கிளன் பிலிப்ஸ் விலகியது அணியில் ஒரு இடத்தை உருவாக்கியது. கிளன் பிலிப்ஸுக்குப் பதிலாக அவருக்கு இணையான மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மைக்கேல் பிரேஸ்வெல்லின் அனுபவம் மற்றும் திறமை நியூசிலாந்து அணியின் சமநிலையை உறுதி செய்யும். முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, மைக்கேல் பிரேஸ்வெல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.

நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 30 முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

batting allrounder Michael Bracewell will replace the injured Glenn Phillips for the first Test against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments