FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

மான்செஸ்டர் டெஸ்ட்: 173 பந்தில் 1 முறை மட்டுமே வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசிய பும்ரா!

பும்ராவின் வேகம் குறைந்துக்கொண்டே வரும் புள்ளி விவரங்கள் குறித்து...

Updated On : 26 ஜூலை 2025, 3:14 pm IST
ஜஸ்ப்ரீத் பும்ரா - படம்: ஏபி
பகிர்:

மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசாதது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருக்கிறது. தற்போது, 4-ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

Advertisement

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் 544/7 ரன்களை எடுத்துள்ளது.

பும்ரா களத்தில் நொண்டிக்கொண்டே இருந்த காட்சிகளும் இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது.

ஹெடிங்லே, லார்ட்ஸ் திடலில் வேகமாகப் பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா ஓல்ட் டிராஃபோர்டில் ஒரே முறை மட்டுமே 140கி.மீ./மணி வேகத்திற்கும் அதிகமாக பந்துவீசியது அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே, பும்ராவுக்கு பணிச்சுமை இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், இந்தப் போட்டி முக்கியமானது என்பதால் ஓய்வெடுக்காமல் விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரில் 140கி.மீ./மணி வேகத்திற்கும் அதிகமாக பும்ரா பந்துவீசிய விவரங்கள்

ஹெடிங்லே: 266 பந்தில் 106 முறை, 39.84 சதவிகிதம்

லார்ட்ஸ்: 257 பந்தில் 69 முறை, 26.84 சதவிகிதம்

ஓல்ட் டிராஃபோர்ட்: 173 பந்தில் 1 முறை, 0.57 சதவிகிதம்

படிப்படியாக பும்ராவின் வேகம் குறைந்துக்கொண்டே வரும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

summary

India's star fast bowler Jasprit Bumrah's failure to bowl at a fast pace (140 km/h) in the Manchester Test has raised doubts about whether he has sustained an injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments