FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி..! லக்னௌ அணி உரிமையாளர் பகிர்ந்த விடியோ!

லக்னௌ அணி வீரர் திக்வேஷ் ரதி டி20 போட்டியில் அசத்தியது குறித்து...

Updated On : 17 ஜூன் 2025, 4:06 pm IST
5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி - படங்கள்: எக்ஸ் / லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்
பகிர்:

லக்னௌ அணி வீரர் திக்வேஷ் ரதி உள்ளூர் டி20 போட்டியில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது வைரலாகி வருகிறது.

இந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ அணியில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி தனது சிறப்பான பந்துவீச்சினாலும் விக்கெட் எடுத்த பிறகு ’நோட்புக் செலிபிரேஷன்’ எனும் அவரது கொண்டாட்டத்தினாலும் கவனம் ஈர்த்தார்.

தொடர்ச்சியாக இந்தக் கொண்டாட்டத்தினால் அபராதம் விதிக்கப்பட்டாலும் திக்வேஷ் அஞ்சாமல் அதைச் செய்து வந்தார்.

Advertisement

Advertisement

இந்தக் கொண்டாட்டத்தினால் தனது ஊதியத்தில் 30 சதவிகிதம் அபராதமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்த திக்வேஷ் ரதி 8.25 எகானமியுடன் பந்துவீசினார்.

உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி எடுத்த 5 விக்கெட்டுகள் விடியோவை லக்னௌ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2025இல் உள்ளூர் போட்டியில் 28 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.

உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி 5 பந்துகளுக்கும் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்த விடியோவை பார்த்து வியந்தேன். ஐபிஎல் 2025-இல் லக்னௌ அணியில் நட்சத்திரமாக மாறுவதற்கான சிறிய முன்னோட்டம்தான் இந்த விடியோ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments