5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் கையை தூக்கிக் காட்டும் பிரபாத் ஜெயசூர்யா. உடன் இலங்கை வீரர்கள்.  படம்: ஏபி.
கிரிக்கெட்

பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தொடரை வென்ற இலங்கை!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை அணி குறித்து...

DIN

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி வென்றது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் ஜூன் 25-இல் கொழும்புவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 247 -க்கு ஆல் அவுட்டாக, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 458-க்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

வங்கதேசம் அணி 2-ஆவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 26 ரன்கள் அடித்தார்.

இலங்கை அணியில் 2-ஆவது இன்னிங்ஸில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தனஞ்ஜெய டி சில்வா, தரிந்து ரத்னநாயகே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரை 1-0 என வென்று அசத்தியது.

ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் இலங்கை பேட்டர் பதும் நிசாங்கா தேர்வானார்.

Summary

Sri Lanka won the Test series against Bangladesh 1-0. prabath jeyasurya take fifer, sri lanka won by an innings and 78 runs against bangladesh in second test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் போ் பயணம்

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

SCROLL FOR NEXT