FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Updated On : 1 மார்ச் 2025, 3:59 pm IST
முகமது ஷமி - படம் | பிசிசிஐ
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

முகமது ஷமிக்கு ஓய்வா?

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள அதன் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் முகமது ஷமி மூன்று ஓவர்கள் வீசிய பிறகு அவருக்கு பந்துவீசுவதில் அசௌகரியம் ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் 6-7 ஓவர்கள் மட்டுமே அவர் வீசியுள்ளார்.

அர்ஷ்தீப் சிங் - படம் | பிசிசிஐ

அர்ஷ்தீப் சிங் நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னோ மோர்க்கல் முன்பாக 13 ஓவர்கள் பந்துவீசி தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். நியூசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், நாளை போட்டியில் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments