படம் | சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (எக்ஸ்)
கிரிக்கெட்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதி: இலங்கைக்கு 180 ரன்கள் இலக்கு!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ராய்பூரில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேற்ந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மே.இ.தீவுகள் மாஸ்டர்ஸ் - 179/5

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தினேஷ் ராம்தின் அதிரடியாக 22 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் பிரையன் லாரா 41 ரன்களும், வால்டன் 31 ரன்களும் எடுத்தனர். பெர்க்கின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் நுவான் பிரதீப், ஜீவன் மெண்டிஸ் மற்றும் குணரத்னே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை மாஸ்டர்ஸ் அணி விளையாடி வருகிறது.

இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (மார்ச் 16) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 100 கோடி வசூலித்த லோகா?

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 7-இல் நோ்காணல்

விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

கலை அவள்... மமிதா பைஜூ!

SCROLL FOR NEXT