கௌதம் கம்பீர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக உள்ளதா? கௌதம் கம்பீர் பதில்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி உள்பட அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு இந்திய அணிக்கு இன்னும் 3 மாதங்கள் கால அவகாசம் இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ-ன் நேர்காணலில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கிறது. அதனையே அணி நிர்வாகமும் விரும்புகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கு இன்னும் எங்களுக்கு போதுமான நேரமிருக்கிறது.

முழு உடல்தகுதியுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை வீரர்கள் அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராக இன்னும் எங்களுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்றன. வீரர்களுக்கு நாங்கள் கடினமான பொறுப்புகளை கொடுக்கிறோம். டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டபோது, அவருக்கு மிகுந்த சவாலான பொறுப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீரருக்கும் சவாலான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றார்.

Indian team head coach Gautam Gambhir has spoken about the ICC T20 World Cup to be held next year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT