உலகக் கோப்பைக்கு ரசிகரும் வரவேண்டுமென அடம்பிடிக்கும் கால்பந்து வீரர்கள்!
காங்கோ கால்பந்து அணியின் ரசிகர் குறித்து...
காங்கோ கால்பந்து அணி அரைநூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது. இதற்காக அந்த நாட்டில் ஏப்.1ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மிஷேல் கூகா எம்போலடிங்கா (49 வயது) என்பவர் காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருக்கிறார். கால்பந்து போட்டியின்போது அந்த நாட்டின் முதல் பிரதமரின் (பாட்ரிக் லுமும்பா) சிலை பாணியில் 90 நிமிஷமும் அசையாமல் இருந்து பிரபலமானார்.
இந்தக் காரணத்தினால், எம்போலடிங்காவுக்கு ’லுமும்பா வே’ என்ற பட்டப்பெயரையும் காங்கோ கால்பந்து ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.
Advertisement
காங்கோ அணி உலகக் கோப்பையில் போர்ச்சுகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் மோதுகிறது. இந்தப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோவிலும் நடைபெற இருக்கின்றன. இவருக்கு விசா வழங்கப்படாதது பேசுபொருளானது.
தற்போது, காங்கோ அணியின் வீரர்கள் அனைவரும் லுமும்பா வேவும் எங்களுடன் கால்பந்து உலகக் கோப்பைக்கு வரவேண்டுமென அதிபரிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
’லுமும்பா வே’ காங்கோ அணியின் சின்னமாக பலரும் பார்க்கிறார்கள். காங்கோ நாட்டின் ஒற்றுமை, ஆர்வத்தை குறிப்பதாக அவர் பார்க்கப்படுகிறார்.