சிஎஸ்கே தக்கவைத்த, விடுவித்த வீரர்கள் விவரம்!
அடுத்த ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக அணிகள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவித்தும் வருகின்றன. அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைக்க இன்றே கடைசி நாள். அணிகள் தங்களுக்குள் டிரேடிங் மூலமும் வீரர்களை மாற்றிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரத்தை சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல், சஞ்சு சாம்சன் (டிரேடிங்), ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சௌதரி.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ரவீந்திர ஜடேஜா (டிரேடிங்), ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, மதீஷா பதிரானா, சாம் கரண் (டிரேடிங்), ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், விஜய் சங்கர்.
Details of the players retained and released in the Chennai Super Kings squad for the next IPL season have been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.