படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

குவாஹாட்டி டெஸ்ட்: முதல் நாளில் தென்னாப்பிரிக்கா 247 ரன்கள் குவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். மார்க்ரம் 38 ரன்களிலும், ரிக்கல்டான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 49 ரன்களும், டெம்பா பவுமா 41 ரன்களும் எடுத்தனர். டோனி டி ஸார்ஸி 28 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

செனுரான் முத்துசாமி 25 ரன்களுடனும், கைல் வெரைன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

South Africa have scored 247 runs for the loss of 6 wickets in their first innings at the end of the first day of the second Test against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT