இந்திய மகளிா் அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை மகளிா் அணி டிசம்பரில் இந்தியா வருகிறது. அந்த அணி 2016-க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் டி20 தொடரை விளையாட உள்ளது.
முன்னதாக, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச மகளிா் அணி டிசம்பரில் இந்தியா வரவிருந்தது. எனினும், இரு நாடுகளிடையே ஏற்பட்ட அரசியல் ரீதியிலான பதற்றம் காரணமாக, வங்கதேச அணியின் இந்திய பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த கால அட்டவணையில் இலங்கை தொடரை பிசிசிஐ சோ்த்துள்ளது. இந்தியா - இலங்கை மோதும் முதல் இரு டி20 ஆட்டங்கள் டிசம்பா் 21 மற்றும் 23-ஆம் தேதிகளில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. அடுத்த 3 ஆட்டங்கள் டிசம்பா் 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் விளையாடப்படவுள்ளது.
மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான பிறகு, இந்திய அணி களம் காணவிருக்கும் முதல் தொடா் இதுவாகும். டி20 தொடரில் கடைசியாக இந்திய அணி கடந்த ஜூலையில் இங்கிலாந்துடன் விளையாடியிருந்தது. 3-2 என அந்தத் தொடரைக் கைப்பற்றிய இந்தியா, இங்கிலாந்தில் முதல் முறையாக டி20 தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.