கரனின் அதிரடியை வீணடித்த மழை: நியூசி. - இங்கிலாந்து முதல் போட்டி கைவிடப்பட்டது!
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதைப் பற்றி...
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சார்ச்சில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாச் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீச்சைத் தெர்ந்தெடுத்தார்.
Advertisement
Advertisement
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணித் தரப்பில் பிலிப் சால்ட் 3 ரன்களில் வெளியேற விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 29 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 15 ரன்களிலும் வெளியேறினர்.
கேப்டன் ஹாரி புரூக் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில், 20 ரன்கள் எடுத்தார். டாம் பாண்டன் 9 ரன்கள், ஜோர்டன் காக்ஸ் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். 16.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து பரிதவிப்புக்குள்ளானது.
பின்னர், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஆல்ரவுண்டர் சாம் கரன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 49 ரன்கள் எடுத்து அணியை 150 ரன்களைக் கடக்க வைத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப், கைல் ஜேமிசன், மிட்செல் சாண்டனர், ஜேம்ஸ் நசீம், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர், நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை துவங்குவதற்கு முன்னதாக மழை பெய்யத் துவங்கியது. மழை நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டி வருகிற திங்கள்கிழமை இதே கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது.
Rain washes out the 1st T20 international between New Zealand and England
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.