ரோஹித் சர்மா படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம் விளாசி ரோஹித் சர்மா சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தால் 38.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசியும், விராட் கோலி அரைசதம் விளாசியும் அசத்தினர். ரோஹித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் (13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் (7 பவுண்டரிகள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

50-வது சர்வதேச சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளார்.

இதுவரை ரோஹித் சர்மா இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 33 சதங்கள், டி20 போட்டிகளில் 5 சதங்கள் விளாசியுள்ளார். மேலும், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட சதங்கள் விளாசியுள்ள ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனையும் ரோஹித் சர்மா வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள்

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை ரோஹித் சர்மா 6 சதங்கள் விளாசியுள்ளார். தலா 5 சதங்களுடன் இந்தப் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திலும், குமார் சங்ககாரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Rohit Sharma has set a record by scoring 50 centuries in international cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரிடியம் மோசடி: மேலும் 27 போ் கைது: சிபிசிஐடி நடவடிக்கை

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்: இதுவரை 6.97 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வருகை

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

SCROLL FOR NEXT