முகப்பு
கிரிக்கெட்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 6 செப்டம்பர், 2025 at 1:20 PM
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம்பர் 6) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட் செய்தது.

முதலில் விளையாடிய இலங்கை அணி ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணியில் கமில் மிஷாரா அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சரித் அசலங்கா 18 ரன்களும், ஷானகா 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஜிம்பாப்வே தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் சிக்கந்தர் ராஸா மற்றும் பிராட் ஈவன்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பிளெஸ்ஸிங் முஸராபானி 2 விக்கெட்டுகளையும், சீன் வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

summary

Sri Lanka were bowled out for 80 runs in the second T20I against Zimbabwe.

முழு கட்டுரையைப் படிக்க →