கடைசி ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிரணி ஆறுதல் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிரணி ஆறுதல் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க மகளிரணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளிலில் வெற்றி பெற்று, தென்னாப்பிரிக்க அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் இன்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது.
Advertisement
Advertisement
பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 25.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் லாரா வோல்வர்ட் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நடின் டி கிளர்க் மற்றும் மஸபட்டா கிளாஸ் தலா 13 ரன்களும், கரபோ மேசோ 12 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் நஸ்ரா சாந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சையதா ஷா 2 விக்கெட்டுகளையும், ஒமையா சொஹாலி மற்றும் டையானா பைக் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சித்ரா அமின் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். முனீபா அலி 44 ரன்களும், நடாலியா பெர்வைஸ் 14 ரன்களும் எடுத்தனர்.
தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.
The Pakistan women's team achieved a consolation victory in the third and final ODI against South Africa.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.