இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்
ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுவதால் இந்த இரண்டு அணிகளின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி, இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று, உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதல் போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என நினைக்கிறேன். ஏனெனில், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், சொந்த மண்ணில் விளையாடுகிறோம் என்ற இந்திய அணியின் அழுத்தத்தை அது போக்கிவிடும். இலங்கைக்கு எதிராக சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தால், இந்திய அணியின் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடர்கள் நடைபெற்றால், அணிகளின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக இருக்கும் என்றார்.
இதற்கு முன்பாக, கடந்த 1978, 1997 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. மீண்டும் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடர் என்பதால், முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்றாக வேண்டும் என்ற கனவுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
31 வயதாகும் மெக் லேனிங் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் 8000-க்கும் அதிகமான ரன்களை அவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The former Australian captain has spoken about what the Indian team needs to do to overcome the pressure of playing on home soil in the ICC World Cup.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.