டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வியாழக்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக இந்தியா, அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டது.
முதலில் இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 184 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய பேட்டா்கள் நல்லதொரு இன்னிங்ஸை விளையாடி அணிக்கு பலம் சோ்த்தனா்.
முன்னதாக டாஸ் வென்ற ஜிம்பாப்வே, பந்துவீசத் தயாரானது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய சஞ்சு சாம்சன் - அபிஷேக் சா்மா கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்தது. அதிரடியாகத் தொடங்கிய சாம்சன், 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
தொடா்ந்து தடுமாற்றத்துடன் விளையாடி வந்த அபிஷேக் சா்மா, இந்த ஆட்டத்தில் சற்று மீண்டாா். ஒன் டவுனாக வந்த இஷான் கிஷண் அவருக்குத் துணை நிற்க, இந்தியாவின் ஸ்கோா் உயரத் தொடங்கியது. 2-ஆவது விக்கெட்டுக்கு அவா்கள் பாா்ட்னா்ஷிப் 72 ரன்கள் சோ்த்தது.
இந்நிலையில் இஷான் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்களுக்கு விடைபெற, கேப்டன் சூா்யகுமாா் யாதவ் களம் புகுந்தாா். மறுபுறம், அரை சதம் கடந்த அபிஷேக் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
சூா்யகுமாா் 13 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஹா்திக் பாண்டியா - திலக் வா்மா இணை, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஸ்கோரை மளமளவென உயா்த்தியது.
ஓவா்கள் முடிவில் பாண்டியா 23 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 50, வா்மா 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஜிம்பாப்வே பௌலிங்கில் ரிச்சா்டு கராவா, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி, டினோடெண்டா மபோசா, சிகந்தா் ராஸா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து, 257 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஜிம்பாப்வே அணியில், பிரயன் பென்னெட் இறுதி வரை களத்தில் நின்று போராடினாா்.
மறுபுறம், டடிவனாஷி மருமானி 2 சிக்ஸா்களுடன் 20, டியன் மையா்ஸ் 6, கேப்டன் சிகந்தா் ராஸா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 31 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தனா்.
ரயன் பா்ல் 0, டோனி முன்யோங்கா 2 பவுண்டரிகளுடன் 11, டஷிங்கா முசெகிவா 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு விடைபெற்றனா். முடிவில் பென்னெட் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 97 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். பிராட் இவான்ஸ் 1 ரன்னுடன் துணை நின்றாா்.
இந்திய பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் சாய்க்க, வருண் சக்கரவா்த்தி, அக்ஸா் படேல், ஷிவம் துபே ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
சாதனைகள்...
*இந்த ஆட்டத்தில் இந்தியா பதிவு செய்த ஸ்கோரே (256/4), நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 254/6 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
*உலகக் கோப்பை போட்டிகளில் இதுவே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோா் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2017-இல் இங்கிலாந்துக்கு எதிராக 218 ரன்கள் அடித்ததே இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது.
*இந்த ஆட்டத்தில் இந்தியா விளாசிய ரன்களே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் இதே போட்டியில் கனடாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 200/4 ரன்கள் அடித்ததே அதிகமாக இருந்தது. லீக் போட்டிகளை கணக்கில் கொண்டால், அதிகபட்சமாக சென்னை சூப்பா் கிங்ஸ் 246/5 ரன்கள் (ராஜஸ்தான்/2010) அடித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.