சஞ்சு சாம்சனுக்குப் பாதுகாவலராக மாறிய சூர்யகுமார்.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

சேட்டன் வருகிறார் வழி விடுங்க... சாம்சனுக்குப் பாதுகாவலராக மாறிய சூர்யகுமார்!

சமூக வலைதளத்தில் வைரலாகும் பிசிசிஐ வெளியிட்ட புதிய விடியோ குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விடியோவில் சூர்யகுமார் யாதவ் தனது சக வீரர் சஞ்சு சாம்சனை கிண்டல் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்திய அணி கடைசி டி20யில் நாளை (ஜன.30) நியூசிலாந்துடன் மோதவிருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.

கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதனால், இந்திய வீரர்கள் கேரளத்துக்கு இன்று வந்தடைந்தார்கள்.

இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கேரளத்தைச் சேர்ந்தவர். அவரை வரவேற்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நடந்துகொண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.

விமான நிலையத்தில் நடந்த இந்தக் காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே அணியும் இந்த விடியோவைப் பகிர்ந்துள்ளதால் தமிழக ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தத் தொடரில் மோசமாக விளையாடும் சாம்சன் கடைசி போட்டியில் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

அடுத்த மாதம் 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்த கடைசி போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் மூலம் தெரியவருகின்றன.

In a video posted by the BCCI on its X page, scenes of Suryakumar Yadav teasing his teammate Sanju Samson are going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி நினைவு நாள்! RN Ravi மரியாதை!

இது தெரியுமா? தொலைபேசியை எடுத்தவுடன் ஹலோ என்று சொல்வது ஏன்?

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறி; உரிய நேரத்தில் கூட்டணி அறிவிப்பு! - பிரேமலதா விஜயகாந்த்

அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கோயில்களின் வரலாற்றை தெரிந்துகொள்வது அவசியம்! வரலாற்று ஆய்வாளர் பிரதீப் சக்ரவர்த்தி

SCROLL FOR NEXT