டி20 உலகக் கோப்பையுடன் நள்ளிரவில் கோயிலுக்குச் சென்ற ஜெய் ஷா!
டி20 உலகக் கோப்பையுடன் நள்ளிரவில் ஜெய் ஷா உள்ளிட்டோர் கோயிலுக்குச் சென்றது பற்றி...
டி20 உலகக் கோப்பையுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஹனுமன் கோயிலுக்குச் சென்ற ஐசிசி தலைவர் ஜெய் ஷா சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
அவருடன் இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் சென்றனர்.
ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
Advertisement
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு நள்ளிரவு 1.20 மணியளவில் கோப்பையுடன் சென்ற ஜெய் ஷா, கெளதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.