ஐபிஎல்

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் இலக்கு

DIN

பஞ்சாப் அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்களும், ஜோர்டான் 30 ரன்களையும் எடுத்தனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 21-வது ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா களம் கண்டுள்ளது.

இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

கேப்டன் கே.எல். ராகுல் 19 ரன்களில் வெளியேற அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  கிறிஸ் கெய்ல் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்களும், ஜோர்டான் 30 ரன்களையும் எடுத்தனர்.

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT