ப்ரித்வி ஷா குணமடைந்து அணிக்கு திரும்பினார்
மும்பை: டைஃபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா குணமடைந்து அணிக்கு திரும்பினார்.
மும்பை: டைஃபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா குணமடைந்து அணிக்கு திரும்பினார்.
இதுவரை 9 ஐபிஎல் போட்டிகளில் 259 ரன்கள் எடுதுள்ளார். அவருடைய அதிகபட்சமான ரன் 61. இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார். காய்ச்சல் காரணமாக கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
டெல்லி அணி ட்விட்டரில் தெரிவித்ததாவது: டைஃபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் இருந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். ஹோட்டலில் உள்ள ப்ரித்வி ஷா எங்களது மருத்துவக் குழுவினால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்.
Advertisement
Advertisement
12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் 5வது இடத்தில் உள்ளது டெல்லி அணி. வரும் திங்கள் கிழமை பங்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.