முகப்பு
ஐபிஎல்

டி வில்லியர்ஸ்: அடுத்த ஐபிஎல்-க்கு நிச்சயமாக வருவேன்

முன்னாள் தென் ஆப்ரிக்க மற்றும் ஆர்சிபி அணியின் பிரபல வீரர் டி வில்லியர்ஸ் அடுத்த வருட ஐபிஎல்-க்கு நிச்சயமாக கலந்துக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:20 AM
பகிர்:

முன்னாள்  தென் ஆப்ரிக்க மற்றும் ஆர்சிபி அணியின் பிரபல வீரர் டி வில்லியர்ஸ் அடுத்த வருட ஐபிஎல்-க்கு நிச்சயமாக கலந்துக் கொள்வேன் என தெரிவித்துள்ளார். 

டி வில்லியர்ஸ் சில மாதங்கலுக்கு முன்பு எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். அதனால் இந்த ஐபிஎல் 2022 இல் விலையாடவில்லை. இந்த முறை ஆர்சிபி அணி ப்ளே ஆப்புக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: எந்தப் பொறுப்பில் எனத் தெரியவில்லை ஆனால் நான் அடுத்த வருடம் நிச்சயமாக ஐபிஎல்க்கு வருவேன். எனது இரண்டாம் சொந்த ஊரான சின்னசாமி ஸ்டேடியத்திற்கு திரும்புதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். 

சமீபத்தில் தான் ஹால் ஆஃப் ஃபேம் விருது டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்லுக்கு ஆர்சிபி அணியின் சர்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.