ரிஷப் பந்த் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாக மாறி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

DIN

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாக மாறி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாக மாறி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் 250 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாகி வருகிறது. ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் சிறப்பாக விளையாடினார். அவர் முதல் நாளிலில் இருந்தே அற்புதமாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது பேட்டிங்கின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது என்றார்.

நேற்றையப் போட்டியில் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 27 பந்துகளில் அதிரடியாக 84 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT