ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த மும்பை வீரர்!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது மிகுந்த கவலையளிப்பதாக ஜேசன் பெஹ்ரண்டிராஃப் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது மிகுந்த கவலையளிப்பதாக ஜேசன் பெஹ்ரண்டிராஃப் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டிராஃப் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லூக் வுட் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது மிகுந்த கவலையளிப்பதாக ஜேசன் பெஹ்ரண்டிராஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பயிற்சியின்போது துரதிருஷ்டவசமாக எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதில் யாருடைய தவறும் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருப்பதை நான் மிகவும் விரும்பினேன். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாததை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்றார்.