நடராஜன்.  படம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் / எக்ஸ்
ஐபிஎல்

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஊதா நிறத் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து போராடித் தோற்றது.

புவனேஷ்வா் குமாா் 3, கேப்டன் பாட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

இந்த 2 விக்கெட்டுகள் மூலம் 15 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார் நடராஜன். 2ஆம் இடத்தில் பும்ரா இருக்கிறார். அதிக விக்க்கெட்டுகள் எடுத்தால் அவர்களுக்கு ஊத நிறத் தொப்பியை வழங்குவது ஐபிஎல் போட்டிகளின் விதிமுறையாகும்.

அதன்படி தற்போது ஊத தொப்பி நடராஜனிடம் உள்ளது. அந்தத் தொப்பியை தனது மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தார் நடராஜன். அவரது மகள் மீண்டும் நடராஜனுக்கு அணிவித்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT