ஐபிஎல்

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பதிலளித்துள்ளார்.

DIN

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறையின்படி ஒரு அணி பிளேயிங் லெவனை தவிர்த்து கூடுதலாக ஒருவரை இம்பாக்ட் வீரராக களமிறக்கிக் கொள்ள முடியும். நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை மீது ரோஹித் சர்மா, அக்‌ஷர் படேல் மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை நீடிக்க வேண்டுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இம்பாக்ட் பிளேயர் விதிமுறை இல்லையென்றால், அணிகள் குவிக்கும் ரன்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமா என்ற கேள்வியும் உள்ளது. இம்பாக்ட் வீரர் இல்லையென்றால், ஆட்டத்தில் அணிகள் குவிக்கும் ரன்கள் குறைந்து விடுமா என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

இம்பாக்ட் வீரர் விதிமுறை இல்லையென்றால், அணியின் ரன்கள் குறைந்துவிடும் என உறுதியாக கூறிவிட முடியாது. இம்பாக்ட் வீரர் விதிமுறையால் முன்வரிசை ஆட்டக்காரர்களுக்கு பலன் இருக்கிறது. ஆனால், இம்பாக்ட் வீரர் விதிமுறை இல்லாவிட்டாலும், அவர்கள் அதிரடியாகவே விளையாடப் போகிறார்கள். ஜேக் ஃபிரேசர், டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களை நிதானமாக விளையாடக் கூறினாலும், அது நடக்கப் போவதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT