முகப்பு
ஐபிஎல்

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதமாகியுள்ளது.

Updated On : 16 மே, 2024 at 3:22 PM
- படம் | ஐபிஎல்
பகிர்:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதமாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஹைதராபாதில் மழை பெய்து வருவதால் இந்தப் போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றையப் போட்டியிலும் மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்படும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.