இஷாந்த் சர்மா.. 
ஐபிஎல்

குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு 25% அபராதம்!

குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியின் போது ஆட்டத்தின் நடத்தை விதிகளை மீறிய குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இஷாந்த் சர்மா அவர் மீதான லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கள நடுவரின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்லின் சட்டவிதிகள் 2.2-ன் படி, மைதானத்தில் இருக்கும் பொருள்கள் அல்லது கிரிக்கெட் உபகரணங்களை தேவையின்றி சேதப்படுத்துவதற்கு இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கும் இஷாந்த் சர்மா, 107 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிக்க: தொடர்ச்சியாக 4 தோல்விகள்; சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் பயிற்சியாளர் கூறுவதென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT