ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது.
இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளன. மும்பை அணி அதன் முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்தது. இரண்டு அணிகளும் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகின்றன.
முதல் போட்டியில் அணியில் இடம்பெறாமலிருந்த ஹார்திக் பாண்டியா, இன்றையப் போட்டியில் விளையாடுவது மும்பை இந்தியன்ஸுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.