முகப்பு
ஐபிஎல்

15 ரன்களை கட்டுப்படுத்த முடியாதா? தீபக் சஹாரை வசைபாடும் மும்பை ரசிகர்கள்!

தீபக் சஹாரை ஆபாசமாகப் பேசிவரும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குறித்து...

Updated On : 7 மே 2025, 5:48 pm IST
பந்துவீசும் தீபக் சஹார். - படம்: பிடிஐ
பகிர்:

குஜராத் உடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தததால் ரசிகர்கள் தீபக் சஹாரை ஆபசமாகப் பேசி வருகிறார்கள்.

வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/8 ரன்கள் எடுத்தது.

மழையின் காரணமாக போட்டி பலமுறை தடைப்பட்டது. கடைசியில் 18 ஓவர்கள் முடிந்தபோது கடைசி ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் குஜராத் வெற்றி பெறும் என டிஎல்எஸ் விதிமுறையின்படி அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

குஜராத் அணியோ 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடைசி ஓவரை தீபக் சஹார் வீச மும்பை இந்தியன்ஸ் அணியினர் முடிவெடுத்தனர்.

கடைசி ஓவரில் 4 1 6 N1 (நோ பால் +1) 1 W 1 என மொத்தம் 15 ரன்களை தீபக் சஹார் கொடுத்தார்.

கடைசி பந்தில் ரன் அவுட் செய்யும் வாய்ப்பும் மும்பை அணிக்கு கிடைத்தது. ஆனால், அதையும் தவறவிட்டார்கள்.

இந்தத் தோல்விக்கு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தீபக் சஹாரின் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆபசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வசைபாடும் மும்பை ரசிகர்கள். - படம்: இன்ஸ்டா / தீபக் சஹார்.

கடந்த சீசனில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா கேப்டனாகும்போதும் இப்படி நடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments