பந்துவீசும் தீபக் சஹார். படம்: பிடிஐ
ஐபிஎல்

15 ரன்களை கட்டுப்படுத்த முடியாதா? தீபக் சஹாரை வசைபாடும் மும்பை ரசிகர்கள்!

தீபக் சஹாரை ஆபாசமாகப் பேசிவரும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குறித்து...

DIN

குஜராத் உடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தததால் ரசிகர்கள் தீபக் சஹாரை ஆபசமாகப் பேசி வருகிறார்கள்.

வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/8 ரன்கள் எடுத்தது.

மழையின் காரணமாக போட்டி பலமுறை தடைப்பட்டது. கடைசியில் 18 ஓவர்கள் முடிந்தபோது கடைசி ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் குஜராத் வெற்றி பெறும் என டிஎல்எஸ் விதிமுறையின்படி அறிவிக்கப்பட்டது.

குஜராத் அணியோ 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடைசி ஓவரை தீபக் சஹார் வீச மும்பை இந்தியன்ஸ் அணியினர் முடிவெடுத்தனர்.

கடைசி ஓவரில் 4 1 6 N1 (நோ பால் +1) 1 W 1 என மொத்தம் 15 ரன்களை தீபக் சஹார் கொடுத்தார்.

கடைசி பந்தில் ரன் அவுட் செய்யும் வாய்ப்பும் மும்பை அணிக்கு கிடைத்தது. ஆனால், அதையும் தவறவிட்டார்கள்.

இந்தத் தோல்விக்கு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தீபக் சஹாரின் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆபசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வசைபாடும் மும்பை ரசிகர்கள்.

கடந்த சீசனில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா கேப்டனாகும்போதும் இப்படி நடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT