பெருமையடைகிறது இந்தியா: மனு பாக்கருக்கு தலைவர்கள் வாழ்த்து
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றார் மனு பாக்கர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றுக்கொடுத்த மனு பாக்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் 221.7 புள்ளிகளுடன் இன்று (ஜூலை 28) வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கப்பட்டியலைத் தொடக்கிவைத்த மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மனு பாக்கரால் இந்தியா பெருமைகொள்கிறது.
நரேந்திர மோடி
இந்தியாவுக்காக துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் மனு பாக்கர். பாரீஸ் ஒலிம்பிக்கில் வரலாற்று பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது. வெண்கலப் பதக்கத்திற்காக மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் பெண். நமது மகள் மிகச்சிறந்த துவக்கத்தைக் கொடுத்துள்ளார். இனி வரவுள்ளவை ஏராளம் என ராகுல் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.