முகப்பு
ஸ்பெஷல்

ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறார் சிஎஸ்கே வீரர்!

எனக்கு ஐபிஎல் தொப்பியை அணிவித்தார் தோனி. மிகவும் பெருமைக்குரிய தருணம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:00 PM
பகிர்:

சிஎஸ்கே அணி வீரரான மார்க் வுட், நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

அடுத்து வருகிற போட்டிகளுக்குத் தயார் ஆவதற்காக இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்துள்ளேன். டெஸ்ட் அணியில் மீண்டும் திரும்பியதாலும், மேலும் தற்போதைய சிஎஸ்கே அணியில் நான் இடம்பெறாததாலும் நாடு திரும்பி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி, டெஸ்ட் அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பை உருவாக்கவுள்ளேன்.

Advertisement

சிஎஸ்கே அணியில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு ஐபிஎல் தொப்பியை அணிவித்தார் தோனி. மிகவும் பெருமைக்குரிய தருணம் அது. இந்த வருடம் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லையென்றாலும் மீண்டும் அந்தத் தொப்பியை அணிய ஆவலாக உள்ளேன். வீட்டில் இருந்துகொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டங்களைப் பார்த்து ஆதரவளிப்பேன் என்று
கூறியுள்ளார். 

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1.50 கோடிக்கு மார்க் வுட்டைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இடம்பிடித்த மார்க் வுட், 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 49 ரன்கள் கொடுத்தார். இதனால் அடுத்த ஆட்டங்களில் மேலும் விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

மே 24 அன்று லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்குத் தயாராவதற்காக இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் மார்க் வுட். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments