முகப்பு
செய்திகள்

கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி - தோனி!

கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில் இன்று கூறியுள்ளதாவது:

Updated On : 3 ஏப்ரல், 2017 at 3:55 PM
பகிர்:

2011-ல் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றபிறகு கல்ஃப் ஆயில் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார் தோனி. ஐபிஎல்-லில் தோனி தலைமை வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் கல்ஃப் ஆயில் நிறுவனம் இணைந்து பணியாற்றியது. பிறகு தற்போது இதே பணியை தோனி இடம்பெற்றுள்ள புணே ஐபிஎல் அணியுடனும் இணைந்து செய்துவருகிறது. மேலும், தோனியின் அறக்கட்டளையுடனும் கல்ஃப் ஆயில் நிறுவனம் இணைந்து செயல்பட்டுவருகிறது. 

இந்நிலையில் கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில் இன்று கூறியுள்ளதாவது: எங்கள் நிறுவனத்தின் இன்றைய நாளின் தலைமைச் செயல் அதிகாரி தோனிக்கு வரவேற்பு அளியுங்கள் என்று ட்வீட் வெளியிட்டுள்ளது. கூடவே தோனியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

தோனி, என். சீனிவாசன் தலைமை வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸின் துணைத் தலைவராகவும் உள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.