செய்திகள்

டி20 கிரிக்கெட்டை நான் உருவாக்கினேன்: கிறிஸ் கெயில் பெருமிதம்!

எழில்

டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் அடித்த முதல் வீரர் கிறிஸ் கெயில். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர்தான் முதலிடத்தில் உள்ளார்.

முதல்முறையாக டி20 சதம், அதிக டி20 ரன்கள் (175*), அதிவேக அரை சதம் (யுவ்ராஜுடன் இணைந்து) என பல சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். 51 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 1537 ரன்கள் எடுத்துள்ளார். 

கரீபியன் பிரீமியர் லீக் தொடர்பாக அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: டெஸ்ட், 50 ஓவர் போட்டிகளை மறந்துவிடுங்கள், நாம் இப்போது டி20 போட்டியில் ஈடுபடுகிறோம். எனக்காக டி20 உருவாக்கப்பட்டது என்பதை விடவும் நான் டி20 போட்டியை உருவாக்கினேன் என்று கூறலாம்.

டி20 கிரிக்கெட்டைப் படைத்தவராக மற்ற வீரர்களுக்கு நான் சொல்ல வருவது - டி20 போட்டியினாலும் ஒரு வாழ்க்கை உண்டு. பேட்டிங் வழியாக டி20 கிரிக்கெட்டில் சாதிக்கமுடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT