செய்திகள்

மலேசிய மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு சாய்னா முன்னேற்றம்

DIN

மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் ஃபிட்ரியானி ஃபிட்ரியானியை எதிர்கொண்டார் சாய்னா. இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 40 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 21-15, 21-14 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார். இது, ஃபிட்ரியானிக்கு எதிராக சாய்னா பெற்றுள்ள 4-ஆவது வெற்றியாகும்.
சாய்னா தனது அரையிறுதியில் ஹாங்காங்கின் யிப் பூய் யின்னை சந்திக்கிறார். முன்னதாக 8 முறை யிப்பை சந்தித்துள்ள சாய்னா, அதில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.
ஜெயராம் தோல்வி: இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் 19-ஆம் நிலை வீரரான இந்தியாவின் அஜய் ஜெயராம் தனது காலிறுதியில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக, இந்தோனேஷியாவின் அன்டோணி சினிசுகா கிங்டிங்கை எதிர்கொண்ட ஜெயராம், 13-21, 8-21 என்ற செட் கணக்கில் 28 நிமிடங்களில் வீழ்ந்தார். அன்டோணிக்கு எதிராக ஜெயராம் சந்திக்கும் 3-ஆவது தோல்வி இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT