செய்திகள்

வெற்றிக்காக வீரர்கள் வேதனைப்படும்படி பேசியாக வேண்டும்: விராட் கோலி

இலங்கையுடன் மோசமாகத் தோற்ற இந்திய அணி ஒரே நாளில் சிறப்பாக விளையாடியது எப்படி?

எழில்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. இதையடுத்து வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியில் வங்கதேசத்தை இந்திய அணி சந்திக்கவுள்ளது.

இலங்கையுடன் மோசமாகத் தோற்ற இந்திய அணி ஒரே நாளில் சிறப்பாக விளையாடியது எப்படி? என்ன சொல்லி அணி வீரர்களை இந்தப் போட்டிக்கு கோலி தயார்ப்படுத்தினார்? இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கோலி கூறியதாவது:

என்ன நடந்துள்ளது என்பதை வெளிப்படையாகப் பேசவேண்டும். சிலசமயங்களில் வீரர்கள் வேதனைப்படும்படியும் பேசியாக வேண்டும். அப்படிப்பட்ட அறிவுரைகளைச் சொல்வதையே நான் நம்புகிறேன். நான் உள்பட நம் அணி என்ன தவறு செய்தது என்பதை வெளிப்படையாகப் பேசி அதை உணர்வது நம் கடமை. சிறப்பான பங்களிப்பை அளிக்கவே கோடிக்கணக்கான மக்களில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். 

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்க முடியாது. ஓர் அணியில் இரண்டு மூன்று பேர் மட்டும் பங்காற்றமுடியாது. எல்லோரையும் பங்களிக்க கோரினோம். அதேபோல தெ.ஆ.-வுக்கு எதிரான ஆட்டத்தில் அனைவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

தோல்விக்குப் பிறகு என்னென்ன தவறுகள் நடந்துள்ளன என்று வீரர்களிடம் பேசியாகவேண்டும். அதேசமயம் அவர்களை ஒரேடியாகக் குறை சொல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். அவர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் என்ன மாதிரியான தரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். கூடுதாக சில விஷயங்களை மட்டும் அவர்களிடம் சொல்லி ஊக்கப்படுத்தவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT