தென் ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனான டுபிளெஸ்ஸி 2019 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 2019 உலகக்கோப்பை வரை எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன். பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன். நான் மட்டுமல்ல, மேலும் வீரர்கள் சிலரும் உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறும் மனநிலையில் உள்ளார்கள்.
டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகுவது என்பது டிவில்லியர்ஸின் முடிவு. அவர் 12 வருடங்களாக நாட்டுக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் டெஸ்ட் ஆடவேண்டும் என்பதே என் விருப்பமும். ஆனால் அவர் முடிவை மதிக்கிறேன். அவர் தகுந்த ஓய்வு எடுத்துக்கொண்டு 2019 உலகக்கோப்பையின்போது புத்துணர்ச்சியுடன் விளையாடுவார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.