பிசிசிஐ தலைவர் லெவன் - இலங்கை அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்கியுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாக மைதானத்தில் இந்த ஆட்ட நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான பிசிசிஐ தலைவர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான சதீரா சமரவிக்ரமாவும் திமுத் கருணாரத்னேவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். சமரவிக்ரமா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். கருணாரத்னே 50 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். லாஹிரு திரிமானி 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 44-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து சிறப்பான முறையில் விளையாடிவருகிறது.