செய்திகள்

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: நாளை முதல் டிக்கெட் விற்பனை!

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. டிக்கெட் விற்பனை காலை 11 மணியளவில் தொடங்குகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ம் தேதி பகலிரவாக நடைபெறுகிறது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ரூ.1200, ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த டிக்கெட்டுகளை நாளை முதல் மைதானத்தின் கவுன்டர்களில் பெறலாம். அதுதவிர, இணையத்தளத்தில், www.bookmyshow.com என்ற இணையத்தளத்திலும் பெறலாம். 

இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர், 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT