செய்திகள்

கார் டயர் வெடித்தது: காயமின்றி உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா!

எழில்

துலீப் டிராபி போட்டியில் இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக உள்ளார் கிரிக்கெட் வீரர் ரெய்னா.

கான்பூரில் நடைபெறும் துலீப் டிராபி போட்டியில் கலந்துகொள்வதற்காக காசியாபாத்திலிருந்து கான்பூருக்கு தன்னுடைய சொகுசு காரில் நேற்று வந்துகொண்டிருந்தார். 

இந்நிலையில் காலை 2 மணியளவில் எட்டாவா என்ற இடத்தின் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகக் காயம் எதுவுமின்றி சுரேஷ் ரெய்னா உயிர் தப்பினார்.

அதிகாலை வேளையில் ரெய்னாவுக்கு உதவ வந்தவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்கள். பிறகு காவல்துறை ரெய்னாவுக்கு மற்றொரு காரை ஏற்பாடு செய்து தந்தது. அதில் கான்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார் ரெய்னா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT