முகப்பு
செய்திகள்

தேசிய கார் பந்தயம்: கெளரவ் கில் முதலிடம்

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற 40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற 40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.
மெட்ராஸ் மோட்டார் விளையாட்டு சங்கம், இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எம்எம்ஆர்டி கார் பந்தய மைதானத்தில் தேசிய கார் பந்தயம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரர்களைக் கொண்ட 31 குழக்கள் பங்கேற்றன. 
மஹிந்திரா அணி சார்பில் பங்கேற்ற நடப்புச் சாம்பியன கெளரவ் கில் பந்தய தூரத்தை 44 நிமிடம் 35 நொடிகளில் கடந்தார். 
அணிகள் பிரிவில் கில்-மூசா இணை பந்தய தூரத்தை 1 மணி நேரம், 28:43. 1 நிமிடங்களில் கடந்தது. அமித்ரஜித் கோஷ்-அஸ்வின் நாயக் இணை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
ஐஎன்ஆர்சி 2-இல் கர்ணகடூர், நிகில் வி பாய் இணை முதலிடத்தைப் பெற்றது. ஐஎன்ஆர்சி 3 -இல் விக்ரம் ராவ்-சோமையா இணை முதலிடத்தைப் பெற்றது.
 

முழு கட்டுரையைப் படிக்க →