உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நடப்பு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நோஸோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார்.
இதில், பி.வி.சிந்து 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் ஓகுஹாராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பி.வி.சிந்து மற்றொரு ஜப்பான் வீராங்கனையான அகான் யமாகுச்சியை எதிர்கொள்ளவுள்ளார்.