செய்திகள்

பார்சிலோனா அணியின் புதிய கேப்டனாக மெஸ்ஸி நியமனம்

ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியான பார்சிலோனாவுக்கு லயோனல் மெஸ்ஸி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

DIN

ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியான பார்சிலோனாவுக்கு லயோனல் மெஸ்ஸி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஸ்பெயின் நாட்டின் கிளப் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமாக அணி பார்சிலோனா. கடந்த 2015-இல் இருந்து கேப்டனாக இருந்தவர் இனிஸ்டா. இவர், தற்போது ஜப்பான் கிளப் அணியில் இணைந்துள்ளார். 

இதையடுத்து, அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2015-இல் இருந்து மெஸ்ஸி 2-ஆவது கேப்டனாக செயல்பட்டு வந்தார். தற்போது இனிஸ்டா இல்லாததால் வரும் லாலிகா தொடரில் இருந்து பார்சிலோனா அணியின் முழு நேர கேப்டனாக மெஸ்ஸி பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

செர்ஜியோ பஸ்குவெட்ஸ், கெரார்ட் பிக் மற்றும் செர்ஜி ரோபெர்டோ ஆகியோர் முறையே 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது கேப்டனாக பொறுப்பேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!

SCROLL FOR NEXT