செய்திகள்

ரூ. 160 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் உலகக் கோப்பையை நடத்த முடியாது: இந்தியாவுக்கு ஐசிசி எச்சரிக்கை

டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூ. 160 கோடியைச் செலுத்தாவிட்டால்...

எழில்

டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூ. 160 கோடியைச் செலுத்தாவிட்டால் 2023 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

2016 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. அப்போது போட்டிகளை ஒளிபரப்ப இந்திய அரசாங்கம் வரிச்சலுகை எதுவும் வழங்கவில்லை. இதனால் போட்டியை ஒளிபரப்பிய ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் வரிகள் அனைத்தையும் கழித்துக்கொண்டு மீதித்தொகையை ஐசிசியிடம் வழங்கியது. 

இந்நிலையில் ரூ. 160 கோடி நிலுவைத்தொகையை ஐசிசிக்கு பிசிசிஐ செலுத்தவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூ. 160 கோடியைச் செலுத்தாவிட்டால் 2021 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2023 உலகக் கோப்பை ஆகிய முக்கியமான போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்கான் கோயிலில் ஆக.15-இல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

செங்குன்றத்தில் இளைஞா் கொலை: இருவா் கைது

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

SCROLL FOR NEXT