யு-19 அணியின் வெற்றிகளை முன்வைத்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்: மஞ்ச்ரேக்கர் எச்சரிக்கை!
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்...
சமீபத்தில் நிறைவடைந்த யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. மேலும், 4 முறை சாம்பியன் ஆன ஒரே அணி என்ற பெருமையும் பெற்றது.
இந்நிலையில் யு-19 அணியின் வெற்றிகள் மூலம் கனவு காண்பது குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
யு-19 வெற்றிகள் குறித்து உணர்ச்சிவசப்படாமல் இருக்கவேண்டும் என்பதும் முக்கியமானது. 2010 முதல் 2016 வரை யு-19 உலகக் கோப்பையில் 64 (இந்திய) வீரர்கள் விளையாடியுள்ளார்கள். அவர்களில் சர்வதேச அளவில் 2 வீரர்கள் மட்டுமே முத்திரை பதித்துள்ளார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.