பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், இந்தியாவிலுள்ள சிறுத்தைக் குட்டி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவின் ராய்பூரில் உள்ள அநாதை சிறுத்தைக் குட்டியைத் தத்தெடுத்துள்ளேன். சிலவாரங்களுக்கு முன்பு இதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் ஜனவரி மாதம் 40 சிறுத்தைகள் கொல்லப்பட்டதாகவும் அதில் மூன்றில் ஒரு பங்கு வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டவை என்கிற தகவல்களை அறிந்தததும் உதவி செய்யும் இந்த முடிவை எடுத்தேன். சிறுத்தைக் குட்டியை நேரில் காண அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தருகிறேன். அவனை நான் எப்படி அழைத்தேன் என நினைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.